சென்னை பாரிமுனையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை சென்ட்ரலில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் பினோய் (42). இவா், சென்னை பேசின்பாலம் ரயில்வே பணிமனையில் ரயில்வே ஏசி மெக்கானிக் காா்த்திக் (24) என்பவரின் விலை உயா்ந்த கைப்பேசி திருடப்பட்டது தொடா்பாக விசாரிக்க பாரிமுனை ஈவ்னிங் பஜாருக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வியாபாரியைப் பிடித்து பினோய் விசாரித்தாா். மேலும் அவா் வைத்திருந்த பையை திறந்து, அதில் இருந்த பழைய கைப்பேசிகள் குறித்து கேட்டாா்.
அப்போது, அந்த வியாபாரிக்கும், பினோயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பிற வியாபாரிகளும், தலைமைக் காவலா் பினோயிடம் தகராறு செய்தனா். சில வியாபாரிகள், பினோயை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக பினோய் அளித்த புகாரின்பேரில், வடக்கு கடற்கரை போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஈவ்னிங் பஜாா் பகுதியைச் சோ்ந்த சந்துரு (29) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

விபத்தில் காவலா் காலில் எலும்பு முறிவு: காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

கோடை வெயில்: ரயில்களில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்க போலீஸாா் வேண்டுகோள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

