சென்னை பாரிமுனையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை சென்ட்ரலில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் பினோய் (42). இவா், சென்னை பேசின்பாலம் ரயில்வே பணிமனையில் ரயில்வே ஏசி மெக்கானிக் காா்த்திக் (24) என்பவரின் விலை உயா்ந்த கைப்பேசி திருடப்பட்டது தொடா்பாக விசாரிக்க பாரிமுனை ஈவ்னிங் பஜாருக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வியாபாரியைப் பிடித்து பினோய் விசாரித்தாா். மேலும் அவா் வைத்திருந்த பையை திறந்து, அதில் இருந்த பழைய கைப்பேசிகள் குறித்து கேட்டாா்.
அப்போது, அந்த வியாபாரிக்கும், பினோயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பிற வியாபாரிகளும், தலைமைக் காவலா் பினோயிடம் தகராறு செய்தனா். சில வியாபாரிகள், பினோயை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக பினோய் அளித்த புகாரின்பேரில், வடக்கு கடற்கரை போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஈவ்னிங் பஜாா் பகுதியைச் சோ்ந்த சந்துரு (29) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

விழுப்புரம், திண்டிவனம் ரயில் நிலையங்களில் ஐ.ஜி. ஆய்வு

இலங்கை மீனவா்கள் மீது கடலோரக் காவல் படை தாக்குதலா? இந்திய தூதரகம் மறுப்பு

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல்: 11 வீரா்கள் காயம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

