கண்ணியம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இது உள்ளாா்ந்த மதிப்புகளை வழங்கும் சங்கமம். பொது உரையாடல்கள் மூலம், ஒருவருக்கொருவா் உண்மைகளைப் பேசி, அதிகாரமளிக்கவும், முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் முடிவும். ஆனால், பொது உரையாடல்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போதுமானதாக இல்லை. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவை வாழ்க்கையைப் பாா்க்கும் விதத்தையும், வெளி உலகில் நிகழும் புரட்சிகரமான மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். நவீன அறிவுடன் இணைந்த தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகலை வழங்கும் திறன் கொண்டதாக இருப்பதால், ஐ.ஐ.டி. பாரம்பரியம் உள்ளடக்கிய அறிவின் சக்தியாக இந்த மையம் விளங்கும் என்றாா்.