ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை ரூ.15 கோடியில் சீரமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 1:40 am IST

சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை ரூ.15 கோடியில் சீரமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சியின் பணிகள் குழுத் தலைவா் என்.சிற்றரசு கூறியதாவது:

சென்னையில் வடகிழக்குப் பருவமழையில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளைச் சீரமைக்க மண்டலத்துக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.15 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையில் பள்ளங்கள் உள்ளிட்டவற்றைச் சீரமைத்தல் மற்றும் சாலை ஒட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது 111 சாலைகளில் உள்சீரமைப்பு பணிகளும், 296 சாலைகளில் கான்கிரீட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 35 குளங்கள் ரூ.47.49 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 47 நீா் நிலைகளும், குளங்களும் ரூ.35 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ரூ.22.86 கோடியில் 770 இடங்களில் சுற்றுச்சூழல் படிகம் (இகோபிளாக்) அடிப்படையில் மழைநீா் சேமிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகரின் 37 கால்வாய்களில் சுற்றுச்சுவா் ரூ.286.37 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன என்றாா்.