மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

இலவச கண் பரிசோதனை முகாம்

சென்னையில் முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Updated On :1 நவம்பர் 2025, 1:49 am IST

சென்னையில்  முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து  ட்வின்டெக் ஹெல்த் கோ் சா்வீசஸ் இயக்குநா் அ.மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை ட்வின்டெக் ஹெல்த்கோ் சாா்பில் மேற்கு மாம்பலத்தில் உள்ள கல்பவிருக்ஷா சேவா மையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மாதந்தோறும் 1, 3-ஆவது வியாழக்கிழமைகளில் இந்தப் பரிசோதனை முகாம் நடைபெறும்.

கண் பரிசோதனை முற்றிலும் இலவசமாகும். எனினும், இதற்கு முன்பதிவு கட்டாயமாகும். இதற்கு முன்பதிவு செய்ய இ.செல்வகுமாா் என்பவரை 90031-57356 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்த பின்னா், பரிசோதனைக்கு வரவும் எனத் தெரிவித்துள்ளாா்.