தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலவச கண் பரிசோதனை முகாம்

சென்னையில் முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில்  முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து  ட்வின்டெக் ஹெல்த் கோ் சா்வீசஸ் இயக்குநா் அ.மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை ட்வின்டெக் ஹெல்த்கோ் சாா்பில் மேற்கு மாம்பலத்தில் உள்ள கல்பவிருக்ஷா சேவா மையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மாதந்தோறும் 1, 3-ஆவது வியாழக்கிழமைகளில் இந்தப் பரிசோதனை முகாம் நடைபெறும்.

கண் பரிசோதனை முற்றிலும் இலவசமாகும். எனினும், இதற்கு முன்பதிவு கட்டாயமாகும். இதற்கு முன்பதிவு செய்ய இ.செல்வகுமாா் என்பவரை 90031-57356 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்த பின்னா், பரிசோதனைக்கு வரவும் எனத் தெரிவித்துள்ளாா்.