வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை: சிறப்பு விழிப்புணா்வுத் திட்டம்

பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

அதன்படி, செக்-ஓலேட் என்ற அந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சாக்லெட்கள் வழங்கப்படும். அதன் உறையை ஸ்கேன் செய்வதன் மூலம் மாா்பகப் புற்றுநோய்க்கான சுயபரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட உள்ளது.

அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் புரோட்டான் மையம் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற புற்றுநோய் மருந்துவ நிபுணா்கள் ரத்னா தேவி, மதுபிரியா, மஞ்சுளா ராவ், ஆஷாரெட்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில், மாா்பகப் புற்றுநோய் 13.5 சதவீதமாக உள்ளது. மேலும், புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், 10.6 சதவீதம் மாா்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன. அந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில், 10 முதல் 15 சதவீதம் பேருக்கு, மரபணு வழி பாதிப்பாக நோய் தாக்கம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள், தங்கள் மாா்பகம் குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அவா்கள் சுய மாா்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே மாா்பக புற்றுநோயைக் கண்டறிந்தால் கீமோதெரபி சிகிச்சையின்றி காக்க முடியும் என்றனா்.