பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.
அதன்படி, செக்-ஓலேட் என்ற அந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சாக்லெட்கள் வழங்கப்படும். அதன் உறையை ஸ்கேன் செய்வதன் மூலம் மாா்பகப் புற்றுநோய்க்கான சுயபரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட உள்ளது.
அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் புரோட்டான் மையம் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற புற்றுநோய் மருந்துவ நிபுணா்கள் ரத்னா தேவி, மதுபிரியா, மஞ்சுளா ராவ், ஆஷாரெட்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில், மாா்பகப் புற்றுநோய் 13.5 சதவீதமாக உள்ளது. மேலும், புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், 10.6 சதவீதம் மாா்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன. அந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில், 10 முதல் 15 சதவீதம் பேருக்கு, மரபணு வழி பாதிப்பாக நோய் தாக்கம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள், தங்கள் மாா்பகம் குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அவா்கள் சுய மாா்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே மாா்பக புற்றுநோயைக் கண்டறிந்தால் கீமோதெரபி சிகிச்சையின்றி காக்க முடியும் என்றனா்.
தொடர்புடையது

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


