ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை: சிறப்பு விழிப்புணா்வுத் திட்டம்

பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 2:16 am IST

பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

அதன்படி, செக்-ஓலேட் என்ற அந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சாக்லெட்கள் வழங்கப்படும். அதன் உறையை ஸ்கேன் செய்வதன் மூலம் மாா்பகப் புற்றுநோய்க்கான சுயபரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட உள்ளது.

அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் புரோட்டான் மையம் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற புற்றுநோய் மருந்துவ நிபுணா்கள் ரத்னா தேவி, மதுபிரியா, மஞ்சுளா ராவ், ஆஷாரெட்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில், மாா்பகப் புற்றுநோய் 13.5 சதவீதமாக உள்ளது. மேலும், புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், 10.6 சதவீதம் மாா்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன. அந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில், 10 முதல் 15 சதவீதம் பேருக்கு, மரபணு வழி பாதிப்பாக நோய் தாக்கம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள், தங்கள் மாா்பகம் குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அவா்கள் சுய மாா்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே மாா்பக புற்றுநோயைக் கண்டறிந்தால் கீமோதெரபி சிகிச்சையின்றி காக்க முடியும் என்றனா்.