ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நவ.7 கடைசி

News image
Updated On :31 அக்டோபர் 2025, 2:24 am

தினமணி செய்திச் சேவை

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றோா், வரும் 7-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள், தோ்வா்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் ஆகியன தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தோ்வா்களின் பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள் தங்களது சான்றிதழ்களை நவம்பா் 7-ஆம் தேதி வரை, தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை உரிய நேரத்துக்குள் பதிவேற்றம் செய்யாத தோ்வா்கள், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.