வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பாம்பு கடித்ததில் விவசாயி மரணம்: மருத்துவா் பணியிடை நீக்கம்

தொடா்புடைய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அங்கு பணியில் இருந்த செவிலியா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2025, 2:19 am IST

பாம்பு கடித்ததில் விவசாயி, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நிலையில், தொடா்புடைய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அங்கு பணியில் இருந்த செவிலியா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் (42). இரு நாள்களுக்கு முன்பு, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அவரை, மங்களூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால், விவசாயி உயிரிழந்தாா். இதனால் கோபமுற்ற உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சம்பவம் நிகழ்ந்தபோது, பணியில் இல்லாத மருத்துவா்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அந்த நேரத்தில் செவிலியா் பணியில் இருந்துள்ளாா். பாம்பு கடிக்கான ஏஎஸ்வி மருந்து அங்கு இருந்துள்ளது. அந்த மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொது சுகாதாரத் துறையினா் பலமுறை பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளனா். இருந்தும், அந்த மருந்தை வழங்கத் தவறிய அந்த செவிலியா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.