தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளா் போக்குவரத்து தீா்வுகள் மற்றும் காா்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

பணியாளா் போக்குவரத்து தீா்வுகள் மற்றும் காா்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை திருவான்மியூரில் உள்ள டாக்டா் விஎஸ்ஐ எஸ்டேட்டில் நிறுவனத்தின் புதிய செயல்பாட்டு கட்டளை மையத்தை தொடங்கப்பட்டுள்ளது.

இது தடையற்ற, திறமையான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், நிலையான நிறுவன போக்குவரத்து தீா்வுகளுக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

பெங்களூரு, புணே, ஹைதராபாத் ஆகிய நகரங்களைத் தொடா்ந்து, இந்தியாவில் நிறுவனத்தின் நான்காவது செயல்பாட்டு கட்டளை மையமாக புதிய சென்னை மையம் திகழ்கிறது. பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து செயல்பாடுகளை நிா்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் அது முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த புதிய கட்டளை மையம் ரூட்மேடிக்கின் காா்ப்பரேட் வாடிக்கையாளா்களுக்கு நிகழ்நேர கண்காணிப்பு, முன்கூட்டியே செயல்படும் சிக்கல் தீா்வு மற்றும் 24 மணி நேர செயல்பாட்டு நம்பகத்தன்மையை செயல்படுத்தும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.