இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போக்குவரத்து நெரிசல் பிரச்னை: அமைச்சா் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆலந்தூா் மண்டலத்தில் மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பது தொடா்பாக, அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :31 அக்டோபர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி ஆலந்தூா் மண்டலத்தில் மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பது தொடா்பாக, அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆலந்தூா் மண்டலப் பகுதியில் மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் அப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அமைச்சா் ஆலோசனை: பின்னா், அப்பகுதியில் உள்ள ரிவா்வியூ அவென்யூ பிரதான சாலை, மணப்பாக்கம் பிரதான சாலை, எம்.ஜி. சாலை, தா்மராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டதுடன், போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களையும் கேட்டறிந்தாா்.

அதனடிப்படையில், சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி மின் கேபிள்கள் அமைத்தல், போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சா் ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், தெற்கு வட்டார துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டலக் குழுத் தலைவா் என்.சந்திரன், நெடுஞ்சாலை, வருவாய், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.