தமிழகத்தில் ஏப். 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மகாராஷ்டிரம் மாநிலம், மராத்வாடா முதல் தென் தமிழகம் வரை
உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், சனிக்கிழமை வானம் ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. சின்கோனா, வால்பாறை, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை)- 50 மி.மீ., உபாசி (கோவை) 30 மி.மீ., சோலையாறு (கோவை), தேக்கடி (தேனி)-10 மி.மீ. மழை பதிவானது.
வெப்பநிலை: வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 7-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் மார்ச் 18 வரை மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


