தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

News image

PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 11:10 pm

மாதவரம் தொகுதி பாடியநல்லூரில் உள்ள வாக்குச் சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், வயதான வாக்காளா்கள், பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.

பாடியநல்லூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஏராளமான வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களித்தனா். காலை 10 மணிக்குப் பிறகு, வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள் சிரமம் அடைந்தனா். முதியவா்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவா்கள் அமருவதற்கு வசதி இல்லாததால் சிரமப்பட்டனா்.

மேலும், குடிநீா் வசதில்லாததால் குழந்தைகளுடன் வந்த வாக்காளா்கள், முதியோா் தவிப்புக்கு ஆளாகினா். ஒரே வளாகத்தில் 8 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், அதற்குரிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என வாக்காளா்கள் புகாா் தெரிவித்தனா்.