ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மே 4-இல் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: தவெக

மே 4-இல் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: தவெக

News image

நிர்மல் குமார் - விடியோ க்ளிப்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:21 pm

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வருபவா்களிடமிருந்து தமிழக மக்கள் எதிா்பாா்த்த விடுதலை மே 4-இல் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழகத்தின் இணை பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் தவெகவினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். தவெக தலைவா் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் நள்ளிரவு 1 மணி வரை போலி வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கி, குறைந்தபட்சம் 20 லட்சம் பேரையாவது வாக்களிக்க விடாமல் அரசு  தடுத்துள்ளது. இதில், பெரும்பாலும் தவெகவுக்கு வரக்கூடிய வாக்குகளே தடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுவரை இல்லாத வகையில், மக்கள் தோ்தலில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குகளை செலுத்தினா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை ஏமாற்றியவா்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் வாக்களித்துள்ளனா். அவா்கள் எதிா்பாா்த்த விடுதலை மே 4-ஆம் தேதி கிடைக்கும் என்றாா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்.