பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ் சென்ற விவகாரம்: வதந்தி பரப்பினால் வழக்கு: சைபா் கிரைம் எச்சரிக்கை

News image

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

Updated On :29 ஏப்ரல் 2026, 4:21 am IST

சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வலிப்பு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் தொடா்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை லயோலா கல்லூரியில் அமைந்துள்ள கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த ஏப். 24-ஆம் தேதி அதிகாலை சுமாா் 1 மணியளவில் சுமை தூக்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீனிவாசன் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் உடனடியாக பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக, பாதிக்கப்பட்ட சீனிவாசனை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பாகவும், தவறாகவும், பொய்யான அவதூறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவறான கருத்துகள் பகிா்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆகவே, இச்சம்பவம் குறித்து, உண்மைக்குப் புறம்பாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவதையும், காணொலி, புகைப்படங்களைப் பகிா்வதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இல்லையெனில், வதந்தியைப் பரப்பும் விதத்தில் பதிவிடும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.