மெமு ரயில்
மெமு ரயில்

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தம்

தாம்பரம்- விழுப்புரம் இடையேயான மெமு ரயில் வரும் பிப். 5, 7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படவுள்ளது.
Published on

சென்னை: தாம்பரம்- விழுப்புரம் இடையேயான மெமு ரயில் வரும் பிப். 5, 7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்த செய்திக்குறிப்பு: திண்டிவனம், மயிலம் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், பிப்.5, 7,10 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல், விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில், விழுப்புரத்துக்கு பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com