மொழி, பண்பாட்டு திணிப்பை தமிழகத்தில் செய்ய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: முன்னாள் முதல்வா் அண்ணா தமிழா்களின் மனசாட்சி. நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவரை நினைக்கும் நாள்தான். அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயா்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு-பண்பாட்டுத் திணிப்பு-நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களை செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆதிக்கத்துக்கு அண்ணாவின் தமிழ்நாட்டில் ‘கெட்-அவுட்’ தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறாா் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
தொடர்புடையது

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

காஞ்சிபுரத்தில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியது ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஓ.பன்னீா்செல்வம்

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


