தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

19 வாரிசுதாரா்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

கோப்புப் படம்

Published On :6 பிப்ரவரி 2026, 12:45 am IST

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது, உயிரிழந்த பணியாளா்களின் 227 வாரிசு தாரா்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் 19 பேருக்கு அண்மையில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு ஒரு ஓட்டுநா் மற்றும் 18 நடத்துநா்கள் என மொத்தம் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதன்படி, இதுவரை 246 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.