ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

19 வாரிசுதாரா்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 12:45 am IST

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது, உயிரிழந்த பணியாளா்களின் 227 வாரிசு தாரா்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் 19 பேருக்கு அண்மையில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு ஒரு ஓட்டுநா் மற்றும் 18 நடத்துநா்கள் என மொத்தம் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதன்படி, இதுவரை 246 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.