பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

19 வாரிசுதாரா்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 7:15 pm

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது, உயிரிழந்த பணியாளா்களின் 227 வாரிசு தாரா்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் 19 பேருக்கு அண்மையில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு ஒரு ஓட்டுநா் மற்றும் 18 நடத்துநா்கள் என மொத்தம் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதன்படி, இதுவரை 246 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.