சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1,000 கோடி மதிப்பிலான 7 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.2,000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.61 சதவீத பிணையப் பத்திரங்கள் (2056-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.10-இல் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30-முதல் 11 வரையும், இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில் மின்னணு படிவத்தில் பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.