தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.
இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1,000 கோடி மதிப்பிலான 7 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.2,000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.61 சதவீத பிணையப் பத்திரங்கள் (2056-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.10-இல் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30-முதல் 11 வரையும், இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில் மின்னணு படிவத்தில் பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

தில்லியில் ரூ.16 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 9 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அரூரில் ரூ.60 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை! பிரதமர் மோடி புகழாரம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



