புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கே. சிலை: இன்று முதல்வா் திறந்து வைக்கிறாா்

புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கே. சிலை: இன்று முதல்வா் திறந்து வைக்கிறாா்
Updated on

புதுப்பிக்கப்பட்ட கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை சென்னை கலைவாணா் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கவுள்ளாா்.

என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-இல் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கலைவாணரின் உருவச்சிலையை கலைவாணா் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்று, சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள், மேயா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், துணைமேயா், கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணனின் குடும்பத்தினா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com