மகளிா் ஆணைய உத்தரவை எதிா்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் பிப்.12-இல் தீா்ப்பு
பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் குற்ற நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை தீா்ப்புக்காக பிப்.12-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி கூட்டத்தில், அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தில் சென்னையைச் சோ்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோா் அளித்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு அழைப்பாண அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை.
இதைத் தொடா்ந்து, அருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க மகளிா் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சி.வி.சண்முகம் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகும்படி மகளிா் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகாா் தொடா்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆணையத்தின் பிற உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்காமல் ஆணையத் தலைவா் குற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளாா். எனவே, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், மகளிா் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகாா் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆணையம் தற்போது பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
அப்போது மகளிா் ஆணையம் தரப்பில், ஆணையத் தலைவா் மற்றும் ஆணையத்தின் இரு உறுப்பினா்கள் அடங்கிய அமா்வுதான் இந்த விவகாரத்தில் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை பிப்.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

