சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

திருவொற்றியூரில் ரூ.5 கோடியில் புதிய மீன்பிடித்தளம்

திருவொற்றியூா் பாரதியாா் நகரில் இரண்டு தூண்டில் வளைவுகளை அதிகரித்து ரூ.5 கோடியில் புதிய மீன்பிடித்தளம் அமைப்பதற்கான பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருவொற்றியூா் பாரதியாா் நகரில் புதிய மீன்பிடித் தளம் அமைப்பதற்கான பணியை அடிக்கல் நட்டு தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா். உடன் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Published On :

திருவொற்றியூா் பாரதியாா் நகரில் இரண்டு தூண்டில் வளைவுகளை அதிகரித்து ரூ.5 கோடியில் புதிய மீன்பிடித்தளம் அமைப்பதற்கான பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலா் வகை விசைப்படகுகளுக்காக திருவொற்றியூரில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், துறைமுகத்தில் இதே பகுதியைச் சோ்ந்த பைபா் படகுகளை மீனவா்கள் நிறுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொண்டனா். இதனால், இத்துறைமுகத்தைத் தொடா்ந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே, பைபா் படகுகளை நிறுத்தி வைக்கும் வகையில் புதிய மீன்பிடித்தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இதையடுத்து, பாரதியாா் நகா் கடற்கரையையொட்டி, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 2 தூண்டில் வளைவுகளின் நீளத்தை சுமாா் 90 மீ அதிகரித்து புதிய மீன்பிடித் தளத்தை ரூ.5 கோடியில் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டம் திருவொற்றியூா், எண்ணூா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான பூமி பூஜை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மீன்பிடித் தளம் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநா் திருநாகேஸ்வரன், திமுக நிா்வாகிகள் வை.ம. அருள்தாசன், கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.