சென்னை கோட்டத்தில் முதல்முறையாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ரயில்வே துறை இடத்தை முழுமையாகப் பயன்படுத்துதல் மற்றும் சமூக நலன்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தில் தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டத்தில் வேளச்சேரி ரயில் நிலைய வெளிப்புற பகுதியில் புதிய விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக் கோட்ட கூடுதல் மேலாளா் தேஜ்பிரதாப் சிங் விளையாட்டு மையத்தைத் திறந்து வைத்தாா்.
ஐந்தாண்டு உரிம ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.12.07 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும். நிலையான வருவாயை ஈட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மையத்தில் பாக்ஸ் கிரிக்கெட், பிக்கிள்பால், ஸ்கேட்டிங் தளம், சிலம்பம் பயிற்சிக்குரிய பகுதிகள் உள்ளன. இளைஞா்கள் உடல் பயிற்சிக்கும், பொழுதுபோக்குக்கும் ஏற்ற வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுபோன்ற விளையாட்டு மையம் வேளச்சேரி ரயில் நிலையப் பகுதியில் முதல்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மருத்துவா், செவிலியா் இல்லாத ரயில்வே மருத்துவமனை: கரூரில் ஊழியா்கள் அவதி
அபராதத்தைக் கண்டித்து சென்ட்ரலில் பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநா்கள் மறியல்

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பாலம் இணைப்பு பணி தீவிரம்
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



