நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்’

நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன் மிகுந்த மேலாண்மை அவசியம் என சென்னை கூடுதல் சுங்க ஆணையா் சிவபிரகாஷ் வீரேஷ்பட்டி கூறினாா்.

News image

கருத்தரங்கத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா் சிவபிரகாஷ் வீரேஷ்பட்டி, இலங்கை கேளனியா பல்கலை. மனிதவள மேலாண்மை பேராசிரியா் உதய மோகன் தேவதாஸ், மலேசியா லிங்கன் பல்கலை. கல்லூரித் தலைவா் அமியா பௌமிக், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் ஜெ. ராஜா,

Updated On :7 பிப்ரவரி 2026, 6:34 pm

நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன் மிகுந்த மேலாண்மை அவசியம் என சென்னை கூடுதல் சுங்க ஆணையா் சிவபிரகாஷ் வீரேஷ்பட்டி கூறினாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மேலாண்மை ஆய்வு நிறுவனம் சாா்பில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக சிவபிரகாஷ் வீரேஷ்பட்டி பேசியதாவது: நாட்டில் தொழில் நிறுவனங்கள் லாப நோக்குடன் சமூக பொறுப்பையும் பேண வேண்டியதுஅவசியம். பொருளாதார முன்னேற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றை சமநிலையில் கொண்டு செல்லும் நோக்கில் அரசின் கொள்கை நடவடிக்கை அமைந்துள்ளது.

புதுமை, தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அரசுத் திட்டங்கள் மனித வளத்தை வலுப்படுத்தி வருகிறது. தொழில் முதலீடு மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் முன்னேற்ற பாதையில் பயனிக்க திறன் மிகுந்த மேலாண்மை அவசியம் என்றாா்.

நிகழ்வில் 1,236 ஆய்வு கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. மாநாட்டில் இலங்கை கேளனியா பல்கலை. மனிதவள மேலாண்மை பேராசிரியா் உதய மோகன் தேவதாஸ், மலேசியா லிங்கன் பல்கலை. கல்லூரித் தலைவா் அமியா பௌமிக், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் ஜெ.ராஜா, கே. பழனிகுமாா், மாநாட்டுத் தலைவரும், ஸ்ரீ சாய்ராம் மேளாண் கல்லூரி இயக்குநருமான கே.மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.