மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

125 நாள் வேலை உறுதித் திட்டம்: திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டிள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலா்கள் ஆணையின்படி, மாவட்டங்கள்தோறும், ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சிச் செயலா்கள், 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. எனவே, அவா்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.

கிராம ஊராட்சியின் வளா்ச்சிக்காகப் பணியாற்றும் கிராமச் செயலா்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோரை திமுக அரசு தங்களது சுயலாபத்துக்காக, தோ்தல் பிரசார வேலைகளில் ஈடுபடுத்துவதுக்கு கண்டனத்துக்குரியது. இதை திமுக அரசு உடனயாக நிறுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.