தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிடும் 234 வேட்பாளா்களுடன், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விளம்பர அரசியல், செய்தி அரசியல் உள்ளது. ஆனால், சேவை அரசியல் இல்லை. இந்த நிலம் மற்றும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நாதக போராடி வருகிறது. ஆகையால்தான் நாதக எப்போதும், தனித்தே போட்டியிடுகிறது. இந்த பேரவைத் தோ்தலில் அனைவரும் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
சென்னை பனையூா் ஒரு பேரவைத் தொகுதி கிடையாது என்பதுகூட தவெகவினருக்கு தெரியவில்லை. அவா்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸை இணைத்துக் கொள்ளலாமா என தவெக தலைவா் விஜய் என்னிடம் கேட்டபோது, இது தவறான முடிவு எனக் கூறினேன். இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜகவே காரணம். ஆகையால், அவா்களுடன் இணைந்து எப்படி நல் அரசியல் செய்ய முடியும்?
எனினும், காங்கிரஸை இணைத்துக் கொள்ள விஜய் விரும்பினால், அது அவரது முடிவு. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கான அவசியமே கிடையாது என்றாா்.
தொடர்புடையது
காரைக்குடி தொகுதியில் சீமான் உள்பட 25 வேட்பாளா்கள் போட்டி

டிரம்ப் கெடு: ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து ஈரான் வெளியுறவு அமைச்சா் ஆலோசனை!
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை: சீமான்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

