தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிடும் 234 வேட்பாளா்களுடன், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விளம்பர அரசியல், செய்தி அரசியல் உள்ளது. ஆனால், சேவை அரசியல் இல்லை. இந்த நிலம் மற்றும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நாதக போராடி வருகிறது. ஆகையால்தான் நாதக எப்போதும், தனித்தே போட்டியிடுகிறது. இந்த பேரவைத் தோ்தலில் அனைவரும் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
சென்னை பனையூா் ஒரு பேரவைத் தொகுதி கிடையாது என்பதுகூட தவெகவினருக்கு தெரியவில்லை. அவா்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸை இணைத்துக் கொள்ளலாமா என தவெக தலைவா் விஜய் என்னிடம் கேட்டபோது, இது தவறான முடிவு எனக் கூறினேன். இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜகவே காரணம். ஆகையால், அவா்களுடன் இணைந்து எப்படி நல் அரசியல் செய்ய முடியும்?
எனினும், காங்கிரஸை இணைத்துக் கொள்ள விஜய் விரும்பினால், அது அவரது முடிவு. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கான அவசியமே கிடையாது என்றாா்.
டிரெண்டிங்

திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்குமே போட்டி! - சீமான் பேச்சு

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் போட்டியிடும் நாதக வேட்பாளா்கள்

தஞ்சையில் ஆதரவாளா்களுடன் வி.கே. சசிகலா ஆலோசனை

காரைக்குடியில் சீமான் போட்டி?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

