செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தமிழக அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை: அன்புமணி கண்டனம்

தமிழக அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை: அன்புமணி கண்டனம்

News image

அன்புமணி

Updated On :7 பிப்ரவரி 2026, 11:14 pm

தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது சரியல்ல என பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியா்கள் போராடினாா்கள். அவா்களின் கோரிக்கை அரசால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அரசு ஊழியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்டு 35 நாள்களாகியும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஊராட்சி செயலா்கள், சத்துணவு பணியாளா்கள், டாஸ்மாக் தொழிலாளா்கள், பகுதி நேர ஆசிரியா்கள் என பலரும் போராடி வருகின்றனா். இந்தச் சூழலில் அரசு ஊழியா்கள் சாா்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது சரியல்ல. அரசு ஊழியா் அமைப்புகளின் பெயரில், திமுகவே பாராட்டு விழாவை நடத்தினாலும், உண்மையான அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஆதரவை திமுக அரசால் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளாா்.