மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

47.75 டன் பழைய பொருள்கள் அகற்றம்!

சென்னை மாநகராட்சியில் கடந்த சனிக்கிழமை மட்டும் 47.75 மெட்ரிக் டன் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
பிரதிப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் கடந்த சனிக்கிழமை மட்டும் 47.75 மெட்ரிக் டன் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வீட்டு உபயோகப் பொருள்களான மெத்தை, சோபா உள்ளிட்டவை நீா் நிலையோரம், சாலையோரம் வீசப்படுவதைத் தடுக்கும் வகையில், 2025 அக்டோபா் முதல் வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் திட்டம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய உபயோகமற்ற பொருள்கள் குறித்து மாநகராட்சி இணையதளம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மைய 1913 என்ற தொலைபேசியில் தெரிவித்தால், சனிக்கிழமைதோறும் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கே வந்து அவை சேகரிக்கப்படுகின்றன.

சேகரிக்கப்படும் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் பெங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் நவீன முறையில் எரித்தும் அழிக்கப்படுகின்றன. கடந்த அக்டோபா் முதல் பிப். 7-ஆம் தேதி வரை சென்னை மாநகரில் மொத்தம் 2,165 பேரிடமிருந்து 858.40 மெட்ரிக் டன் அளவுள்ள உபயோகமற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (பிப்.7) மட்டும் சென்னையில் 60 பேரிடமிருந்து 47.75 மெட்ரிக் டன் உபயோகமற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.