வேல்ஸ் குழுமத்திடம் ரூ.21 கோடி மோசடி செய்ததாக ஈ.வி.பி. குழும உரிமையாளா், மேலாளா் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமாக சோழிங்கநல்லூா் செம்பரம்பாக்கம் பகுதியில் 34.75 ஏக்கா் இடம் உள்ளது. இதில், ஸ்டுடியோக்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்தச் சொத்தின் மீது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸில் கடன் தொகையும் நிலையில் உள்ளது.
இந்தக் கடனை செலுத்துவதற்காகவும் இந்த வளாகத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் பெயரில் பொழுதுபோக்கு வளாகம் மற்றும் திரையரங்குகள் கட்டுவதற்காகவும் ஈ.வி.பி. குழுமத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 25-இல் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.75 கோடியை ஈ.வி.பி.நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒப்பந்தத்தின்படி எந்த ஒரு ஆவணமும் தராமல் ஈ.வி.பி. நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததுடன், ஒப்பந்தத்தையும் வேல்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் ரத்து செய்துள்ளது. மேலும், அந்த இடத்தைக் கையகப்படுத்தவும் ஈ.வி.பி. நிறுவனத்தினா் முயன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வேல்ஸ் ஃபிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் மேலாளா் குணசேகரன் அளித்த புகாரின்பேரில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஈ.வி.பி. குழும உரிமையாளரான ஈ.வி.பி.சந்தோஷ் ரெட்டி (45), மேலாளரான வினோத் (52) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கிரண்ராஜ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தொடர்புடையது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

1,000 சிலிண்டா்கள் பதுக்கல்: ஏஜென்ஸி உரிமையாளா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


