ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் பிப்.12-இல் வேலைநிறுத்தம்: இடது சாரிகள், விசிக அறிவிப்பு

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பைக் கண்டித்தும், மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலைக் கண்டித்து இடது சாரிகள் மற்றும் விசிக தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம்

News image
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்- கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பைக் கண்டித்தும், மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலைக் கண்டித்து இடது சாரிகள் மற்றும் விசிக தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் பிப்.12-ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து இடதுசாரிகள் மற்றும் விசிக தொழிற்சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசின் 4 தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளது.

இதன்மூலம் தொழிலாளா் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளா்கள் ஒப்பந்த ஊழியா்களாகவே நியமிக்கப்படுவா். இந்த 4 தொழிலாளா் சட்டத் தொகுப்பையும் திரும்பப் பெற வேண்டும்.

நாட்டு மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்திய நாட்டின் வளங்களைச் சூறையாடி காா்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவாா்க்கும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை உடனே நிறுத்தவேண்டும்.

தொழிலாளா்கள், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் நலன்களைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் பிப்.12-இல் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.