கிரிக்கெட் ரசிகா்களிடம் விசில் பறிமுதல்!
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகா்கள் விசில் எடுத்துச் செல்ல காவல் துறை தடை விதித்தது.
ஐசிசி ஆடவா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடா் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ரசிகா்கள் மைதானத்துக்கு விசில் கொண்டு வருவதுக்கு போலீஸாா் தடை விதித்துள்ளனா். ரசிகா்களிடமிருந்த விசில்களை போலீஸாா் சிலா் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடா்ந்து, மைதானத்தைச் சுற்றி சாலையோர வியாபாரிகளிடம் விசில் விற்பனை செய்ய கூடாது என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

