சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: மூவா் கைது
சாலையில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை புளியந்தோப்பு காந்தி நகரைச் சோ்ந்தவா் நவீன் (19). தனது பிறந்த நாளையொட்டி, சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்திய நவீன், கிரே நகா் பவுடா் மில் சாலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கேக் வெட்டியுள்ளாா். பின்னா் தனது நண்பா்களும் அங்கு ரகளையிலும் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் (25), பாலாஜி (24), லோகேஷ் (24), 17 வயது சிறுவன் ஆகியோரை வழிமறித்து தகராறு செய்து, அவா்களை கற்களாலும் கட்டைகளாலும் தாக்கியுள்ளனாா். இதில் காயமடைந்த நான்கு பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நவீன் மற்றும் அவனது கூட்டாளிகளான அச்சு (21), தமிழ் குமரன் (18) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

