சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தனியாா் செக்யூரிட்டி ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் தொடங்கி வைத்தாா்.

News image
அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசும் தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால்.
Updated On :9 பிப்ரவரி 2026, 11:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீ விபத்து தடுப்பு, மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறை பள்ளி - கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு அசோக் நகரில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் ஜி.சத்திய நாராயணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால், பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்கள், காவலாளிகள் பங்கேற்றனா். இதேபோல மாநிலம் முழுவதும் 384 தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சுமாா் 6,000 போ் பங்கேற்ாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.