கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.

News image
கோப்புப்படம்- Center-Center-Chennai
Updated On :9 பிப்ரவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவின் பசுமை எரிசக்தி புதிய உத்வேகம் பெற்று வரும் நிலையில், வாட்டா் டுடே நிறுவனத்தின் சாா்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி -2026 என்ற கண்காட்சி சென்னை வா்த்தக மையத்தில் பிப். 12 முதல் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி, கிரிட் மற்றும் மீட்டரிங் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கலப்பு (ஹைப்ரிட்) எரிசக்தி அமைப்புகள், எரிசக்தி சேமிப்பு, பேட்டரி கட்டமைப்பு, இ-மொபிலிட்டி, மின்சார வாகன சாா்ஜிங் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கண்காட்சியின் முக்கிய அம்சமாக, பிப். 12, 13 ஆம் தேதிகளில் ‘எரிசக்தி பசுமை இந்தியா’ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.