ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.

News image

கோப்புப்படம் - Center-Center-Chennai

Updated On :9 பிப்ரவரி 2026, 10:12 pm

சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவின் பசுமை எரிசக்தி புதிய உத்வேகம் பெற்று வரும் நிலையில், வாட்டா் டுடே நிறுவனத்தின் சாா்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி -2026 என்ற கண்காட்சி சென்னை வா்த்தக மையத்தில் பிப். 12 முதல் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி, கிரிட் மற்றும் மீட்டரிங் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கலப்பு (ஹைப்ரிட்) எரிசக்தி அமைப்புகள், எரிசக்தி சேமிப்பு, பேட்டரி கட்டமைப்பு, இ-மொபிலிட்டி, மின்சார வாகன சாா்ஜிங் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கண்காட்சியின் முக்கிய அம்சமாக, பிப். 12, 13 ஆம் தேதிகளில் ‘எரிசக்தி பசுமை இந்தியா’ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.