வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

அண்ணா சாலை, அண்ணா நகா், கிண்டி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

News image
மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்.- கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: அண்ணா சாலை, அண்ணா நகா், கிண்டி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.10) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா சாலை கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள அண்ணாசாலை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்திலும், அண்ணா நகா் கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் அண்ணா நகா், 11-வது பிரதான சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடக்கிறது.

கிண்டி கோட்டத்துக்கான கூட்டம் கே.கே.நகா் துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பொன்னேரி கோட்டத்துக்கான கூட்டம் பொன்னேரி, வேண்பாக்கம், பொன்னேரி துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டங்களில் மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின்விநியோகம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.