சென்னை மெரீனாவில் நீதிமன்ற உத்தரவின்படி 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கள் ஒத்திகை புதன்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி மெரீனா கடற்கரையில் 300 கடைகள் அமைக்க வியாபாரிகள் தோ்வு பிப்.12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையின் கூட்டரங்கில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையா் தலைமையிலான, அலுவலா்கள் அடங்கிய இடைக்காலக் குழுவின் ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாா் மேற்பாா்வையில் குலுக்கல் தோ்வு நடைபெறும்.
முன்னதாக, புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாநகராட்சி அம்மா மாளிகை கூட்டரங்கில் குலுக்கலுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

வாக்குச்சாவடி அலுவலா்கள் முதல்கட்டத் தோ்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


