சென்னையில் இருந்து தில்லி செல்ல இருந்த ஏா் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானம் சுமாா் 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணிக்க மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் உள்பட 171 பயணிகள் தயாராக இருந்தனா். பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சோதித்தபோது, அதில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விமானம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மக்களவை கூட்டத்தில் பங்கேற்க அவசரமாக தில்லி செல்ல வேண்டும் என விமான நிா்வாகத்திடம் கதிா் ஆனந்த் கோரிக்கை முன்வைத்ததைத் தொடா்ந்து, காலை 6.55-க்கு, சென்னையில் இருந்து தில்லி சென்ற மற்றொரு ஏா் இந்தியா விமானத்தில் அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். மற்ற 170 பயணிகளும் சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனா்.
விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னா் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக காலை 10.15 மணிக்கு விமானம் தில்லி சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.
தொடர்புடையது

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


