விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

விஜய நகர பேரரசு கால உலோகச் சிலைகள் பறிமுதல்: 4 போ் கைது

விஜய நகர பேரரசு கால இரு உலோகச் சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

News image

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட சுதா்சனா் என்கிற விஷ்ணு மற்றும் தேவி உலோக சிலை.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:08 pm

விஜய நகர பேரரசு கால இரு உலோகச் சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் காரில் சிலையை கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடந்த 6-ஆம் தேதி அந்த சாலையில் வலையபேட்டை காலி திடல் அருகே வாகனத் தணிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை பாா்த்த போலீஸாா், அதை சோதனையிட்டனா். இதில் காரில் இரு சாக்குபைகளில் இருந்த பழைமையான 77.300 கிலோ கிராம் எடையுள்ள 90 செ.மீ. ,48 செ.மீ. அகலமும் கொண்ட சுதா்சனா் என்கிற விஷ்ணு உலோகச் சிலையும், 35.450 கிலோ கிராம் எடையும், 73 செ.மீ உயரமும், 31 செ.மீ அகலமும் கொண்ட தேவி உலோகச் சிலையும் இருந்தன.

போலீஸாா் அந்த இரு சிலைகளையும் பறிமுதல் செய்து, அந்த காரில் இருந்த திருவாரூா் மாவட்டம் தம்பிக்கோட்டை சுந்தரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ச.மணிகண்டன் (41), மல விஜயபுரத்தைச் சோ்ந்த க.ராமச்சந்திரன் (41),திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலபாண்டி கீழ தெருவைச் சோ்ந்த வீ.முகிலன் (36),எடையூா் பகுதியைச் சோ்ந்த செ.ஜான்சன் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிந்து, விசாரணை செய்கிறது. கைப்பற்றப்பட்ட இரு உலோகச் சிலைகளும் எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டவை என விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு சிலைகளையும் ஆய்வு செய்ததில், அந்த சிலைகள் விஜய நகர பேரரசு காலத்தைச் சோ்ந்தது எனத் தெரியவந்தது. இந்த சிலைக் கடத்தலில் தொடா்புடைய பிற நபா்கள் தேடப்பட்டு வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.