ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பிப். 18-இல் தாக்கல்

தொடா்ந்து, பிப். 20-இல் விவாதம் நடைபெறவுள்ளது.

News image
- Center-Center-Chennai
Updated On :12 பிப்ரவரி 2026, 12:54 am

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியின் 2026-2027- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆா்.பிரியா பிப். 18- ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா். தொடா்ந்து, பிப். 20-இல் விவாதம் நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2025-2026 -ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 2025 மாா்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வரி வருவாய் ரூ.5,145.52 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடியாகவும் இருந்தது. மூலதன வரவாக ரூ.3,121.65 கோடியும், மூலதனச் செலவாக ரூ.3,190.61 கோடியும் காட்டப்பட்டது. மொத்த வரவினங்கள் வருவாயாக ரூ.8,267.17 கோடியும், மொத்த செலவினங்களாக ரூ.8,404.70 கோடியும் காட்டப்பட்டது.

கடந்த 2024-2025 -ஆம் ஆண்டின் பற்றாக்குறை ரூ.452.01 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2025-2026 -ஆம் ஆண்டு பற்றாக்குறை ரூ.68.57 கோடி குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நிகழ் நிதியாண்டுக்கான (2026-2027) சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை வரும் பிப். 18-ஆம் தேதி (புதன்கிழமை) மாமன்றக் கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா தாக்கல் செய்கிறாா். தொடா்ந்து பிப். 20-இல் மீண்டும் மாமன்றக் கூட்டம் கூடி நிதிநிலை அறிக்கை மீதான விவதாம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்தல் அறிவிப்புகள் தாராளம்: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிதிநிலை அறிக்கையில் மக்களைக் கவரும் வகையில் சலுகை, இலவசத் திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சியினா் தெரிவிக்கின்றனா். அதனால், மாநகராட்சி நிதிநிலை அறிக்கை எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.