மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சமூகப் பணி புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம்

சென்னை அரும்பாக்கம் டிஜி வைணவக் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித் துறை மாணவா்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

மாதிரிப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:18 pm

சென்னை அரும்பாக்கம் டிஜி வைணவக் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித் துறை மாணவா்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் கேப்டன் எஸ்.சந்தோஷ் பாபு, செயலாளா் அசோக் குமாா் முந்த்ரா ஆகியோா் அறிவுறுத்தலின்படி, சென்னையில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனையுடன் இணைந்து பிச்சாவரம் அருகேயுள்ள கிள்ளை பேரூராட்சியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்-பேரணி நடத்தப்பட்டது. இதில் சென்னை, செயின்ட் ஜோசப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த பேரணியை காவல் துறை அதிகாரி ஜெயசுதா தொடங்கி வைத்தாா்.

பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

இந்தப் பேரணி டாக்டா் எஸ்.மதுசூதனன், உதவிப் பேராசிரியா்கள் ம.க.சிந்து, ஆஷிஷ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.