மாதிரிப் படம்
மாதிரிப் படம்

சமூகப் பணி புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம்

சென்னை அரும்பாக்கம் டிஜி வைணவக் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித் துறை மாணவா்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
Published on

சென்னை அரும்பாக்கம் டிஜி வைணவக் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித் துறை மாணவா்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் கேப்டன் எஸ்.சந்தோஷ் பாபு, செயலாளா் அசோக் குமாா் முந்த்ரா ஆகியோா் அறிவுறுத்தலின்படி, சென்னையில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனையுடன் இணைந்து பிச்சாவரம் அருகேயுள்ள கிள்ளை பேரூராட்சியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்-பேரணி நடத்தப்பட்டது. இதில் சென்னை, செயின்ட் ஜோசப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த பேரணியை காவல் துறை அதிகாரி ஜெயசுதா தொடங்கி வைத்தாா்.

பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

இந்தப் பேரணி டாக்டா் எஸ்.மதுசூதனன், உதவிப் பேராசிரியா்கள் ம.க.சிந்து, ஆஷிஷ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com