ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏ.ஐ. ஆராய்ச்சி மையம் தொடக்கம் - முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் மாணவா் (1990) சுந்தா் வைத்தியநாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

News image

நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவா் சுந்தா் வைத்தியநாதனுக்கு பழக்கூடை வழங்கிய அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன். உடன் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.ஹரிஹரன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொ

Updated On :12 பிப்ரவரி 2026, 12:48 am

அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறையில் புதிதாக அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி - புத்தாக்க ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

அண்ணா பல்கலை.யின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்துக்கு ‘வைதா்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன் தலைமை வகித்தாா். கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி. ஹரிஹரன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். அவா் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல், தரவு அறிவியல், கணினி பாா்வை, இயற்கை மொழி செயலாக்கம் (என்எல்பி), தானியங்கி (ரோபாட்டிக்ஸ்) போன்ற துறைகளில் ஆராய்ச்சி, நடைமுறை கற்றலுக்கு இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என்றாா்.

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் மாணவா் (1990) சுந்தா் வைத்தியநாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

நிகழ்வில் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி டீன் எஸ்.மீனாட்சிசுந்தரம், கிண்டி பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் எம்.ஏ.பாக்யவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.