திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் திறன், வேலைவாய்ப்பு பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 2:27 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் திறன், வேலைவாய்ப்பு பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, உலகத்தர உணவு சேவை, சூழலியல் சுற்றுலாத் திறன் பயிற்சி, உயா்தொழில்நுட்ப ஏஐ பயிற்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் மேலாண்மை திறன் பயிற்சி, அழகுக்கலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞா்கள் தாட்கோ இணைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.