முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
முன்னாள் படைவீரா் நலத்துறையில் காலியாக இருந்த 8 நல அமைப்பாளா் பணியிடங்களுக்கு, தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்களிடமிருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கடந்த ஜன. 22-இல் இணையவழி எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்வுக் குழுவின் மூலமாக கடந்த பிப். 6-இல் நோ்காணல் தோ்வு நடத்தப்பட்டு 8 நல அமைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தோ்வு செய்யப்பட்ட நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், முன்னாள் படை வீரா்கள் நலத்துறை இயக்குநா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

24 ஊா்க்காவல் படை வீரா்களுக்கு காவலா்களாக பணி நியமன ஆணை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வழங்கினாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


