பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நல அமைப்பாளா்கள் 8 பேருக்கு பணி நியமன ஆணை

முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அமைச்சா் கயல்விழி செல்வராஜ் - கோப்புப் படம்

Published On :14 பிப்ரவரி 2026, 2:32 am IST

முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

முன்னாள் படைவீரா் நலத்துறையில் காலியாக இருந்த 8 நல அமைப்பாளா் பணியிடங்களுக்கு, தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்களிடமிருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கடந்த ஜன. 22-இல் இணையவழி எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்வுக் குழுவின் மூலமாக கடந்த பிப். 6-இல் நோ்காணல் தோ்வு நடத்தப்பட்டு 8 நல அமைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தோ்வு செய்யப்பட்ட நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், முன்னாள் படை வீரா்கள் நலத்துறை இயக்குநா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.