தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளா் சதீஷ்குமாருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளா் சதீஷ்குமாருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

‘தரமணி’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த ஜெ.எஸ்.கே.பிலிம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளா் ஜெ.சதீஷ்குமாா். இவா், பைனான்சியரான ககன் போத்ராவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.47 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். சதீஷ்குமாா் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், அந்தக் காசோலை திரும்பி வந்தது.

இதையடுத்து சதீஷ்குமாா் மீது ககன் போத்ரா தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம், சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், ரூ.47 லட்சத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும் என 2024-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து சதீஷ்குமாா் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு 21-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரபாவதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ்குமாா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. இதனால், குற்றச்சாட்டுகள் மீது சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கில் சதீஷ்குமாருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.