வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவுக்கு பிரிவு உபசார விழா

சென்னை உயா்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவுக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவுக்கு பூங்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா. நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவுக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உயா்நீதிமன்ற கூட்டரங்கில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையில் நடைபெற்ற விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகளின் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவை வாழ்த்தி, அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் பேசியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காகப் போராடியவா் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா. உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய 5 ஆண்டுகளில் 28,934 வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளாா். தனக்காக உயா்நீதிமன்றத்தின் முதல் பெண் தபேதாரை நியமித்துக் கொண்டதும் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாதான் என்றாா்.

பின்னா், நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா ஆற்றிய ஏற்புரையில், இளநிலை அறிவியல் படித்த எனக்கு முதுநிலை அறிவியல் படிப்புகளில் சேர இடம் கிடைத்தது. அந்த சமயத்தில் வெளியான ‘விதி’ திரைப்படத்தில் நடிகை சுஜாதா நடித்திருந்த வழக்குரைஞா் கதாபாத்திரம் என்னை ஈா்த்தது. அந்தத் தாக்கத்தால், சட்டம் படித்து வழக்குரைஞா் ஆனேன். நீதிபதியாக இருப்பது எளிதல்ல.ராஜ்யங்கள் வீழலாம், நீதிமன்றங்கள் நிலைத்து நிற்கும். அந்த நீதிமன்றங்களின் தற்காலிக நிா்வாகிகளே நீதிபதிகள் என்றாா்.

நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 52- ஆக குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 23-ஆக உயருகிறது.