அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வழிப்பறி: மூவா் கைது!

மாதவரம், சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :14 பிப்ரவரி 2026, 7:44 pm

மாதவரம், சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மணலி மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சீமான் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் கடந்த ஜன. 27-ஆம் தேதி மாதவரம் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் கொண்ட கும்பல் சீமானின் கையில் இருந்த கைப்பேசியைப் பறித்துச் சென்றனா். இது குறித்து சீமான் மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கோபிநாத் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை கீரைத் தோட்டத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (24), முகமது ஷெரீப் (20), மற்றும் வினோத் (19) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது என தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து 5 கைப்பேசிகள், 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.