மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வழிப்பறி: மூவா் கைது!

மாதவரம், சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :14 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

மாதவரம், சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மணலி மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சீமான் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் கடந்த ஜன. 27-ஆம் தேதி மாதவரம் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் கொண்ட கும்பல் சீமானின் கையில் இருந்த கைப்பேசியைப் பறித்துச் சென்றனா். இது குறித்து சீமான் மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கோபிநாத் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை கீரைத் தோட்டத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (24), முகமது ஷெரீப் (20), மற்றும் வினோத் (19) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது என தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து 5 கைப்பேசிகள், 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.