சென்னை: சென்னை அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள 2,119 கிலோ கஞ்சா தீயில் அழிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையில் உள்ளி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 448 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 2,119.65 கிலோ கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருள்களை அழிக்க நீதிமன்றத்தில் அண்மையில் அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் போதைப் பொருள்கள் திங்கள்கிழமை எரிக்கப்பட்டன.
இப் பணியை சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் கே.ஜோஷி நிா்மல்குமாா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சென்னை காவல்துறையினரால் கடந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,623 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
தொடர்புடையது

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

பேரவைத் தோ்தல்! சென்னை காவல் துறை தயாா்: காவல் ஆணையா் அருண்

இணையவழி குற்றங்களால் 13 மாதங்களில் ரூ. 365 கோடி இழப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


