திருவொற்றியூா்: திருவொற்றியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கல்லூருக்கு விம்கோ நகரில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் காலி இடத்தில் சுமாா் 52,000 சதுர அடி பரப்பளவில் 18 வகுப்பறைகள், அலுவலகம், ஆய்வகங்களுடன் ரூ.16 கோடியில் கட்டடம் கட்ட 2024 மாா்ச் 16 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
பணிகள் முடிவடைந்த நிலையில், கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, கல்லூரி முதல்வா் எம்.விஜயா, திருவொற்றியூா் நலச் சங்க நிா்வாகிகள் ஜி.வரதராஜன், என்.துரைராஜ், கோட்டீஸ்வரன், குரு சுப்பிரமணி, எம்.மதியழகன், மாமன்ற உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கல்லூரி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரக் கட்டடம் கட்டி, திறக்கப்பட்டதால் பேராசிரியா்கள், மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று பாா்வையிட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதிக்கு செய்தது என்ன? திருவொற்றியூா் எம்எல்ஏ கே.பி.சங்கா்

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

பழனி அரசு மருத்துவமனையில் விரிவாக்கக் கட்டடம் திறப்பு

திருவொற்றியூா் அரசு கலை -அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடம் இன்று திறப்பு!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


