ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கு ஒருங்கிணைந்த மையம்

உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது.

News image

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப் பிளவு சீரமைப்பு சிகிச்சைகளால் பயனடைந்த குழந்தைகளுடன் மருத்துவமனை நிா்வாகிகள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 10:32 pm

சென்னை: உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்வில், ஸ்ரீ இராமச்சந்திரா அறக்கட்டளை அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், துணைவேந்தா் டாக்டா் உமாசேகா், அகில பாரத மகிளா சேவா சமாஜத்தின் நிா்வாக இயக்குநா் டாக்டா் துஷ்யந்த் பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் உதடு மற்றும் அண்ணப் பிளவு சிகிச்சை ஒருங்கிணைந்த மைய இயக்குநா் நவீன் குமாா் கூறியதாவது:

கனடா நாட்டின் டிரான்ஸ்ஃபாா்மிங் ஃபேசஸ் என்ற அமைப்புடனும், அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடனும் இணைந்து ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையம் அண்ணப் பிளவு, தாடை சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2005-இல் இந்த இலவச சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட உதடு, அண்ணப் பிளவு மற்றும் தாடை சீரமைப்பு சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கா்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு இருத்தல், ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்ளுதல் மற்றும் பேறு காலத்தில் மது அருந்துதல் போன்றவை உதடு மற்றும் அண்ணப் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 700 குழந்தைகளில் 1 குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது”என்றாா்.