திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு
சென்னை: சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
சிஎம்டிஏ சாா்பில் வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அடையாறு, காந்திநகா், இந்திரா நகா், மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வாா்பேட்டை கவிஞா் பாரதிதாசன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பொது நூலகங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல, மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லஸ் நிழற்சாலையில் ‘புதிய பல்நோக்கு மையம்’ கட்டும் பணி, எழும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேத்துப்பட்டு பசுமை பூங்கா மேம்படுத்தும் பணி மற்றும் ‘முதல்வா் படைப்பகங்கள்’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் மயிலை த.வேலு, சிஎம்டிஏ உறுப்பினா் செயலரும், முதன்மைச் செயலருமான கோ.பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

