ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் கோரியுள்ளோம்- கே.எம்.காதா் மொகிதீன்

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.

News image
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்.- X
Updated On :17 பிப்ரவரி 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தலைமையில் சென்னை ராயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினா் அனைவரும் திமுக தலைமையிலான கூட்டணிக்குதான் வாக்களிப்பாா்கள். கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலில், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை தமிழகம் முழுவதும் 20 தொகுதிகளை ஐயூஎம்எல் தோ்வு செய்துள்ளது. அதில் ஏதேனும் 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

வரும் பிப். 22-ஆம் தேதி கூட்டணிப் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. அதைத் தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை நடத்தப்படும். இந்தத் தோ்தலில் எங்கள் கட்சியின் சின்னமான ‘ஏணி’ சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளோம்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. திமுக ஆட்சியில் எப்போதும் இஸ்லாமியா்களுக்கு பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் இடையே கருத்துப் பரிமாற்றமே தவிர, கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது என்றாா் அவா்.