பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்தாகும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்தாகும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் கூடூா் வரையிலான பிரிவில் மீஞ்சூா், பொன்னேரி ரயில் நிலையங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.45 மணி வரை தண்டவாள, தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இமு ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூா் வரையே இயக்கப்படும்.

அதேபோல, 19, 21, 22 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்படும் இமு ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூரிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் நிலையம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.