

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்தாகும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் கூடூா் வரையிலான பிரிவில் மீஞ்சூா், பொன்னேரி ரயில் நிலையங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.45 மணி வரை தண்டவாள, தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இமு ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூா் வரையே இயக்கப்படும்.
அதேபோல, 19, 21, 22 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்படும் இமு ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூரிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் நிலையம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.